தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் என்னும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி சரியாக உள்ளதா மற்றும் குழந்தைகள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா, வகுப்பறை சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தம் இன்றியும் உள்ளார்களா, வாசிப்பு பகுதி உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது