தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நகராட்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்கும் பணியை தீவிர படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலமாக நியமனம் செய்யப்பட்ட தகுதியுள்ள முதுகலை பாட ஆசிரியர்கள் மற்றும் முதுகலை மொழி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களின் விவரங்களை வழங்கும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கருணை அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் கடந்த ஆண்டு பதவி உயர்வுக்கு தேர்வாகாமல் ஜனவரி 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி பதவி உயர்வுக்கு தேர்வான முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் என பல விவரங்களை சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.