தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். 2024-25 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறிய அவர், அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.