தமிழகத்தில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விருதுக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகளில் கற்றல், தூய்மை, அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும். ஒரு மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.