தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக்க கையாண்ட ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேசன் கடை பணியாளர்கள் அனைவருக்கும், குடும்ப அட்டைகளுக்கு தலா 50 பைசா என கணக்கிட்டு ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.