ராமாயணம் உண்மை, இராமன் உண்மை எனில் இராவணன் உண்மைதான். அவன் தென் தமிழ்நாட்டை சேர்ந்தவன், சிவ பக்தன். இராவணன் பிறந்தது அன்றைக்கு இருந்த மிக பழமையான காஞ்சிபுரம் என்கிறோம். அப்படியானால் காஞ்சிபுரத்தில் சங்கரமடத்துக்கு கீழே தான் இராவணன் பிறந்த பூமி இருக்கிறது.

அந்த இடத்தில் தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் இராவணனின் பூர்வீகத்தை கண்டுபிடிக்கலாம். ஆகையால் தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கீழே அகழ்வராய்ச்சி செய்து இராவணன் பிறந்த இடத்தை கண்டறிய வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.