தஞ்சையில் அரசு அனுமதி இன்றி செயல்பட்ட டாஸ்மார்க் பாரில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அரசு அனுமதியின்றி இயங்கிய 50 மது கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கூடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 121 மது கூடங்கள் அனுமதி இன்றி இயங்கி வந்தது தெரிய வந்த நிலையில் 104 மதுக்கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.