கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதுமட்டுமின்றி ஆளுநர் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே பொருத்தமாக இருக்கும் என பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகம் என்பது சட்ட விரோதமான வார்த்தையா? அல்லது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல பிரச்சனைகளை திசை திருப்பவே இது கிளப்பப்பட்டுள்ளது என்றார்.