மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.