தமிழகத்தில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழக பாஜக மிகவும் தெளிவாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒன்பது தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த இருக்கின்றோம். மேலும் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்த இருக்கின்றோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.