தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி பாபா அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.