தமிழக அரசானது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையப் பகுதிகளிலும் முறையாக மாதம்தோறும்  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையாக பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளும் பட்சத்தில் தேவையற்ற மின்தடை மின்விபத்துக்களை தவிர்க்க முடியும். அதன்படி தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் தினசரி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 9 மற்றும் 10ஆம் தேதி (சனி ஞாயிறு இரண்டு) நாட்களும் வார இறுதி  விடுமுறை தினங்கள் என்பதால் தமிழகத்தில் எந்த பகுதியில் மின்தடை ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களை விடுமுறை நாட்களை மகிழ்ச்சியோடு செலவிட முடியும். மேலும் அடுத்தடுத்து வரும் நாட்களில் பொது தேர்வு நடக்க இருப்பதால் தமிழகத்தில் மின்தடை அச்சுறுத்தல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.