தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் திறன்வழி தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மதிப்பீட்டு தேர்வுகள் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பு மதியம் 2 மணி முதல் அடுத்த 23 மணி நேரத்திற்குள் அந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.