தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த உதய குமார், பெங்களூரில் வேலைபார்த்து வருகிறார்.

இவர் சுற்றுலா போவதற்காக கோவா சென்றுள்ளார். பின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் சென்று சுற்றுலா முடிந்த பிறகு திருச்சி திரும்பியுள்ளார். இந்த நிலையில் கோவாவிலிருந்து திருச்சி திரும்பிய உதயகுமாருக்கு கடும் வயிற்றுப் போக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு தனியார்  மருத்துவமனையில் உதயகுமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று உறுதி செய்வதற்கு முன்பே அவர் நேற்று காலை இறந்துவிட்டார்.