தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைய ணயதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.