செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் பதவியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் 18,536 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். B.A முடித்தவர்கள் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். வயது 42 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது.

இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை http://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் A80, பத்தாவது குறுக்கு தெரு அண்ணா நகர் செங்கல்பட்டு 603001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04435006105 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகலுடன் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகம் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.