தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும். இதன் மூலம் ஒரு தேர்வு அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.