தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை சற்று குளிரூட்டும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.