தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி 26 வினாடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியானது என பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தன் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஒருபோதும் எதிர் வினையாற்றவில்லை என்று தெரிவித்த அவர் தனது பொது வாழ்க்கையில் இதுவரை செய்த அனைத்தும் முதலமைச்சருமான ஸ்டாலினால்தான் எனக் கூறியிருந்தார். மேலும் எங்களை பிரிப்பதற்கான எந்த முயற்சியும் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.