நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 15 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதில் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவுக்கு கண்டனம், போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளனர்.