தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள் புதுப்பொலிவு பெற போகிறது. ஆம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் 1500 ரூபாய் கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.