தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்தது.

அதே சமயம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளில் இருந்து துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான கடைசி தேதி மே 20ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. என் நிலையில் மாணவர்களின் நலனை கருதி மே 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே மே 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தவறினால் சிறப்பு அனுமதி திட்டம் மூலமாக மே 24 முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.