தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 22 வரையும், +1 மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் மார்ச் 25 வரையும் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியாக்கியுள்ளது.

அதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு பிப்ரவரி 12 முதல் 17 வரையும், பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பிப்ரவரி 19 முதல் 24 வரையும் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் அந்த குறிப்பிட்ட தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.