தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவரும் வேலை வாய்ப்பு பெற்று சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதே கலைஞரின் கோட்பாடு என தெரிவித்துள்ளார். மேலும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.