தமிழகத்தில் குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 வழங்கும் திட்டமானது செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது  இந்நிலையில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பெற “ஜீரோ பேலன்ஸ்” என்ற அடிப்படையில் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் தொடங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்பு தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.