தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். அதனைப் போல கோவை மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட வெயில் சற்று அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.