தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையின் படி தான் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே 6ஆம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 12ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும். மேலும் இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் வழக்கம்போல் வீட்டில் இருந்தபடியே செல்போன் மற்றும் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.