தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் எமிஸ் இணையதளத்தில் வருகை பதிவை தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணியை பாதிக்கும் எந்தவித பதிவேற்ற பணிகளையும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர் மதிப்பீடு மற்றும் தேர்வு உள்ளிட்ட இணைய வழி பதிவேற்றங்களை மேற்கொள்ள 14,000 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.