முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேளம்பாக்கத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே மூன்றாம் தேதி 290 பேருந்துகளும், மே நான்காம் தேதி 365 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.