தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 15 முதல் 22ஆம் தேதி வரை கைபேசி செயலி மூலமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு தேதிகள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் பருவ தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.