தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகள் பழுதடைந்து மழை நீர் தேங்கி வருவதால் மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உடனடியாக பணிகளை துரிதப்படுத்தும் படியும் கூடிய விரைவில் பணியினை முடிக்கும் வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் தற்போது டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவி  வரும் நிலையை தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும்  அனைத்து பொதுமக்களுக்கும் தூய்மையான குடிநீர் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறுகிறதா என்பதை அந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.