நடப்பாண்டில் மீதமுள்ள நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2023 ஆம் வருடம் கடைசி வாரத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்று திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த திங்கட்கிழமை புத்தாண்டு என்பதால் அன்றும் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் வங்கிகளுக்கு விடுமுறை.

இதற்க்கு இடைப்பட்ட நாட்களில் வங்கிகள் முழு நேரமும் செயல்படும். இதனால் மக்கள் எந்த தாமதம் இல்லாமல் தங்களுடைய பணிகளை முடித்துக் கொள்ளலாம். அந்த மாதத்தில் மட்டும் 7 நாட்கள் தமிழகத்தில் வங்கிகள் செயல்படாது. இதில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.