தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற மருந்து எடுத்துக் கொண்டாலே கொரோனா சரியாகிவிடுகிறது. இப்போது இருக்கும் நிலையில் மாநில அளவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.