தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை தொடர்ந்து அனைவருக்கும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது . இந்த விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்பு அறிவித்தது போல அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஆனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.