தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பல உதாரணங்களை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில் 850 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.