தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்கம்பங்களில் சீரமைப்பு பணிகள், புதிய பொருட்களை பொருத்தும் பணிகள் மற்றும் மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.