தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொது தேர்வு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

அதேசமயம் மே மாதம் ஐந்தாம் தேதி பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது பிளஸ் டூ தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு முடிந்த பிறகு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.