கோடை வெயில் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும், கொரோனா பாதிப்பானது சற்று குறைந்ததால் திட்டமிட்டபடி பொது, இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தேர்வை சிறப்பாக எழுதி முடித்துள்ளனர்.

இந்நிலையில் 6-12ம் வகுப்புக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவித்திருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் விடுமுறை தினங்களில் மாணவர்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.