தமிழகத்தில் ஓவியம், இசை, தையல், உள்ளிட்ட 2 பாடத்தை கற்பிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. அதன் முதல் கட்டமாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு  நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காலி பணியிடங்கள் குறித்து விவரங்களை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் எமிஸ்  இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பொது மாறுதல் கலந்தாய்வானது பகுதி நேர ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் நடைபெறுவதால் இதனை ரத்து செய்யவோ மாற்றம் செய்வோ முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.