பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், உண்மையிலேயே அவர்கள் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்துக்களை வன்முறை வழியில் அழைத்து செல்கிறார்கள். இந்துக்களை வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்களிடையே வெறுப்பு அரசியலை விதைத்து,  அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்,  இதுதான் உண்மை.

இந்துக்களை படியுங்கள்,  உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றங்கள் என்று அவர்கள் பரப்புரை செய்யவில்லை. இவர்களின் நோக்கம் நிறைவேறுவதற்காக முஸ்லிம்களுக்கும்,  கிறிஸ்தவர்களுக்கும் எதிராக அவர்களிடத்தில் வெறுப்பை விதைத்து கொண்டே இருக்கிறார்கள். வன்முறைகளை தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை வன்முறை பாதையில் இழுத்துக் கொண்டே போகிறார்கள்.

ஆகவே இந்துக்களை வன்முறையாளர்களாக உருவாக்குவதே பிஜேபி , ஆர்.எஸ்.எஸ்  தான். அப்படி என்றால் இந்துக்களுக்கு அவர்கள் எதிராக இருக்கிறார்களா ? இல்லையா ? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே இந்துக்களை அவர்கள் நேசிப்பதாக இருந்தால் இந்துக்களை நல்வழிப்படுத்த வேண்டும். இந்துக்களை அமைதி வழியில்,  அறவழியில் வழி நடத்த வேண்டும்.

இந்துக்களிடையே நல்ல அன்பை போதிக்க வேண்டும். இந்துக்கள் இடையே நல்லிணக்கத்தை போதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்துக்களிடம் எதை விதைக்கிறார்கள் என்றால் ? முஸ்லிம்கள் நம்முடைய பரமவிரோதிகள், கிறிஸ்தவர்கள் நமக்கு பரம விரோதிகள். இவர்கள் இங்கே மதமாற்றம் செய்கிறார்கள். இவர்கள் நமக்கு எதிரிகள் என பேசினார்.