தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ஆனது 1118 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆறு மாதங்களாக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதாவது புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டருக்கு 300 வரையிலும் மானியம் வழங்கப்பட்டு வந்தது .

மேலும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 150 மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி புதுச்சேரியில் வீட்டு உபயோத்திற்கான சிலிண்டரின் விலை ஆனது 500 ரூபாய் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென்று சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.