சிவகாசி மாவட்டத்தில் கோவில்பட்டி அமைந்துள்ளது. சிவகாசி மாவட்டம் பட்டாசு ஆலைகளுக்கு பிரபலமான ஊர். மேலும் கோவில்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு வகையான சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டியை தனி மாவட்டமாக பிரித்து உள்ளதாக சமூக வலைதளங்களை செய்தி வெளியாகி உள்ளது. அதில் வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதியில் இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகாசி பட்டாசுகள் என்ற பிரபல பெயர்களுக்கு தான் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். தனி மாவட்டமாக பிரித்தால் தங்களுடைய தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் கோவில்பட்டியை தனி மாவட்டமாக பிரிக்கும் பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.