புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தின் கடலூரை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக பொது சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு போன்ற பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் செல்வோர் எப்போது தமிழகம் வருகிறார்கள் என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை எனவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.