கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாலயான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவில் 9 நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் இந்த கோவிலில் நாளை தேர் திருவிழா நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அந்த மாவட்டத்திற்கு வருவது உண்டு. இந்த திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 20-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.