இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் சென்னை – நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த வாராந்திர வந்தே பாரத் ரயில், ஜனவரி மாதம் மட்டும் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன. 4 முதல் 25 வரை உள்ள 4 வியாழக்கிழமைகளில், சென்னையில் இருந்து காலை 5.15க்கு கிளம்பும் வந்தே பாரத் ரயில், மதியம் 2.10க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50க்கு கிளம்பும் அதே ரயில், இரவு 11.45க்கு சென்னை வந்தடைகிறது.