தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது இது மூன்றாவது முறையாகும். விரைவில் தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகள் எவை எவை என்பது குறித்த பட்டியல் அடுத்த வாரம் வெளியாகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.