தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுணர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை வில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனைப் போலவே 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதனை நிறைவேற்ற கோரி வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.