தமிழகத்தில் வாழ இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வேளாங்கண்ணி திருவிழா, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அடுத்த நான்கு நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் தமிழக முழுவதும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நான்கு நாட்களுக்கு பிற ஊருக்கு செல்ல 150 சிறப்பு பேருந்துகளும் கோவை, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 100 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து கழகங்களில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்ல முன்பதிவு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் தற்போது ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.