இந்தியாவின் வரலாற்று வெற்றியை சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலம் பதிவு செய்தது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்புமணி மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சந்திரயான் 3 வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை. இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்று தெரிவித்துள்ளார்.