தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் விருது விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் வழங்கப்படும் பல்வேறு விருதுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கும் விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்தின் போது அந்த பிரிவில் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான அனைத்து தகவல்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.